kodo Millet (வரகு) கோழி பிரியாணி
தேவையான பொருட்கள்:
அரைக்கவேண்டிய பொருள்கள்
புதினா இலைகள் கையளவு
பச்சை மிளகாய் 3
இஞ்சி பூண்டு விழுது 1 ½ sp
தானிய தூள் 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள்
கொத்தமல்லி இலைகள் ½ கைப்பிடி
1 எலுமிச்சை சாறு
பிரியாணி சமைக்க:
வரகு அரிசி - 2 டம்ளர் - 2முறை கழுவி வடிகட்டியில் உலர்த்தவும்.
கோழி - 1 கிலோ
தேங்காய் எண்ணெய் -3 கரண்டி
மசாலா
நறுக்கிய பெரிய வெங்காயம் 2
உப்பு
காஷ்மீரி சிவப்பு மிளகாய் தூள் 1 டீஸ்பூன்
பிரியாணி மசாலா தூள் 1 ½ டீஸ்பூன்
தண்ணீர் - 3 டம்ளர்
எப்படி செய்வது:
சமைப்பதற்கு முன் அனைத்து மசாலாக்களையும் மிக்சியில் சேர்த்து, மிருதுவான பேஸ்ட் போல் செய்து, சமைப்பதற்கு முன் வைக்கவும்.
அடுப்பை ஆன் பண்ணிக்கோங்க குக்கரில் எண்ணெய் மற்றும் அனைத்து மசாலாப் பொருட்களையும் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கிய பின் சிறிது வெங்காயம் சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கவும்.
அடுத்து உப்பு, மிளகாய் தூள், மசாலா தூள் சேர்த்து மீண்டும் வதக்கவும்.
பின்னர் அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டை 1 நிமிடம் இந்த குக்கரில் சேர்க்கவும். ஒரு கொதி வந்ததும் சிக்கன்-னை சேர்க்கவும்.
கொத்தமல்லி தழை சேர்த்து நன்கு கலந்து 1 விசில் வைக்கவும். தண்ணீர் சேர்க்க வேண்டாம்.
1 விசில் வந்ததும் குக்கரை தனியாக வைக்கவும். குக்கரில் வந்து தனல் எல்லாம் குறைஞ்ச பிறகு குக்கரை திறக்கவும். தண்ணீர் 3 கிளாஸ் சேர்த்து ஒரு கொதி வந்ததுக்கு அப்புறமா , அடுப்பை அதிக தீயில் வைத்து அரிசியை நன்றாக கலக்கவும்.
அரிசி - ய10 நிமிடம் குறைந்த தீயில் வைக்கவும்.
அரிசியை 2 நிமிடத்திற்கு ஒரு முறை கரண்டியால் கிளறி விடவும், அரிசி வேக 8 முதல் 10 நிமிடங்கள் ஆகும்.
குறிப்புகள்: அரிசியில்தண்ணீர் சேர்க்க வேண்டும் என்றால் வெந்நீரை மட்டும் சேர்க்கவும், அப்பொழுது தான் அரிசி உதிரியாக வேகும். பச்சத் தண்ணீரை கலந்தால் அரிசி கூலாக மாறிவிடும்.
அதனால் கவனமாக செய்யவும்.
செய்முறை வீடியோ
Comments
Post a Comment