மிக்சர் செய்முறை. பிரபலமான மற்றும் சுவையான தென்னிந்திய சிற்றுண்டிகளில் ஒன்று, உங்களுக்குப் பிடித்த நட்ஸ் மற்றும் மசாலாப் பொருட்களுடன் வீட்டிலேயே எளிதாகத் தயாரிக்கலாம்.
தேவையான பொருட்கள்:
சாதாரண ஓமப்பொடிக்கு
2 கிளாஸ் கடலை மாவு
¼ கிளாஸ் அரிசி மாவு
பெருங்காயத்தூள் / அசாஃபோடிடா சிட்டிகை
சமையல் சோடா - ¼ sp
மஞ்சள் தூள்
வெண்ணெய் - ¼ sp
சூடான எண்ணெய் - 1 டீஸ்பூன்
ருசிக்க உப்பு
தேவைக்கேற்ப தண்ணீர் (பிசைய)
சாதாரண பூந்திக்கு
1 கிளாஸ் கடலை மாவு
¼ கிளாஸ் அரிசி மாவு
பெருங்காயத்தூள்
காஷ்மீரி மிளகாய் தூள் - ¼ sp
சமையல் சோடா - ¼ sp
மஞ்சள் தூள்
வெண்ணெய் - ¼ sp
சூடான எண்ணெய் - 1 டீஸ்பூன்
ருசிக்க உப்பு
தேவைக்கேற்ப தண்ணீர் (இட்லி மாவு போல் கலக்கவும்)
மற்ற பொருள்கள்:
2 கைப்பிடி வேர்க்கடலை / நிலக்கடலை
1 கைப்பிடி பொட்டுக்கடலை
1 கைப்பிடி கறிவேப்பிலை
6 பூண்டு தோலுடன் நசுக்கியது
1 கைப்பிடி அவல்
இறுதியாகச் சேர்க்க:
¼ sp சிவப்பு மிளகாய் தூள்
¼ sp உப்பு
செய்முறை :
1. முதலில் இரும்பு கடாயில் எண்ணெயை சூடாக்கி ஓமப்பொடி செஞ்சுக்கலாம் .
2. ஓமப்பொடி பொருட்கள் அனைத்தையும் சப்பாத்தி மாவு போல் பிசையவும் .
3. ஓமப்பொடி செய்ற கட்டை -யில எண்ணெய் தடவி ஓமப்பொடி செய்யவும்.
4. அடுத்து , அதே எண்ணெயில பூந்தி பொருட்களையும் கலந்து, இட்லி மாவு போல் செய்து, பூந்தி கரண்டியை பயன்படுத்தி மாவை ஊற்றி இன்னொரு கரண்டி-யை வைத்து மாவை தேய்த்தால் பூந்தி எண்ணெயில் வடிவமாக வரும்.
5. மீண்டும் அதே எண்ணெயில் மற்ற பொருட்கள் அனைத்தையும் கடலை , பூண்டு ஒவ்வொன்றாக மிதமான தீயில் வறுத்து தனியாக வைக்கவும்.
6. இறுதியாக ஓமப்பொடியை சிறியதாக உடைத்து , பூந்தி மற்றும் அனைத்து வறுத்த மற்ற பொருட்களையும் கலந்து மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து கிளறி பரிமாறவும்.
7. இதை காத்து புகாத சில்வர் டப்பாவில் வைத்து பல நாள் சாப்பிடலாம் .
Comments
Post a Comment