வெற்றிலையில் உள்ள மகத்தான சில மருந்துவத்தை பற்றி தெரிந்துகொள்ளலாமே
வெற்றிலை - கொடி வகையைச் சேர்ந்தது. இது இந்தியாவில் வெப்பமான இடங்களிலும், சதுப்பு நிலங்களிலும் வளரக்கூடியது.
வெற்றிலையில் கம்மாறு வெற்றிலை, கற்பூர வெற்றிலை, சாதாரண வெற்றிலை போன்ற வகைகள் உள்ளன. வெற்றிலையில் அதன் இலையும் வேரும் மருத்துவப்பலன்களைத் தரக்கூடியவை . நம் ஊர்களில் காய்கறிகள் மற்றும் முருங்கை, அகத்தி, வாழை உள்ளிட்டவற்றை வளர்க்கும் கொடிக்கால்களிலும் அகத்தி மரங்களிலும் வெற்றிலையைப் படரவிடுவது வழக்கமாக உள்ளது.
வெற்றிலை-யில் சில மகத்தான மருந்துவம் :-
தலை வலி:-
தலைவலி எதனால் ஏற்படுகிறது என்பதை தெரிந்து கொள்வோம்.
பெரும்பாலான மக்களுக்கு, அதிகமான மன அழுத்தம் காரணமாகவே பெரும்பாலும் தலைவலி ஏற்படுகிறது.
இன்னும் சிலருக்கோ, குறைவான சர்க்கரை அளவு, ஒவ்வாமை, சில மருந்துகளை அதிகமாக எடுத்துக் கொள்வது, சத்துக் குறைபாடு, அதிகப்படியான வேலை, சரியான தூக்கம் மற்றும் ஓய்வு இல்லாமை,
ஜுரம் போன்ற நோய்கள் ஏற்பட்ட காலங்களிலும், மற்ற வகையான உடல் நல பிரச்சனைகளாலும், சிலருக்கு தலை வலி உண்டாகின்றது.
தலை வலி ஏற்பட்ட சமயங்களில் வெற்றிலையின் சாற்றினை அருந்துவதால், உடனடியாக தலை வலி குறையும்.மேலும், வெற்றிலை நெற்றியில் வைத்து ஒரு துணியால் கட்டிக்கொண்டு தூங்கினால், மீண்டும் எழுந்திருக்கும்போது தலை வலி முற்றிலும் நீங்கி இருக்கும்.
சுவாச கோளாறுகள்:-
இருமல் மற்றும் மூச்சு விடுவதில் பிரச்சனை இருந்தால், வெற்றிலையை கொண்டு அவைகளை சரிசெய்யலாம். வெற்றிலையில் 2 ஸ்பூன் தேனுடன் சாப்பிட்டால் இருமலுக்கும், மூச்சு விடுவதில் உள்ள சிரமங்களுக்கும் நல்ல நிவாரணியாக விளங்கும்.
பல் ஆரோக்கியம்:-
உணவுத் துணுக்குகள் ஆகியவை பல் இடுக்குகளில் மாட்டிக் கொள்கின்றது. எத்தகைய உணவை சாப்பிட்ட பிறகும், வெற்றிலைகளை நன்கு மென்று சாப்பிட்டால் அதன் சாறுகள் பற்கள் ஈறுகளில் தங்கியிருக்கும் கிருமிகளை அழிக்கின்றது.பல் சொத்தை, பற்கூச்சம் போன்ற பிரச்சனைகள் ஏற்படுமால் தடுக்கின்றது.
வெற்றிலைகளை அவ்வப்போது சாப்பிட்டு வருவதால் அந்த வெற்றிலையில் இருக்கும் இயற்கையான அமிலங்கள், வயிறு, குடல் போன்றவற்றில் இருக்கும் நச்சுக்கள், அழுக்குகள் நீக்கி, உணவு செரிமானம் செய்யும் திறனை அதிகரிக்கின்றது.
கிருமி நாசினி:-
அது மட்டும் இல்லை வெற்றிலை ஒரு சிறந்த கிருமி நாசினியாகவும் செயல்படுகின்றது. வெற்றிலை இயற்கையிலேயே மனிதர்களின் உடல் நலத்திற்கு உதவும் இயற்கை ரசாயனங்கள் அதிகம் கொண்ட ஒரு பயிர் செடியாகும்.
தொற்றுக்கிருமிகளால் நோய்கள் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் சில துளிகள் வெற்றிலை அருந்துவது, அந்த நோய்க் கிருமிகள் அழிவதற்கு உதவும்.
காயங்கள் மற்றும் புண்கள் போன்றவற்றிலும் வெற்றிலை சாறுகளை விட்டு வர, அதில் இருக்கும் கிருமிகள் அழியும். வலி, எரிச்சல் போன்றவையும் குறையும்.
தெரிந்து கொள்ளுங்கள்: -
வெற்றிலை-யின் காம்பை நீக்கிவிட்டு தான் சாப்பிட வேண்டும்.இது பொதுவானவை.
வெற்றிலையில் உள்ள மகத்தான சில மருந்துவத்தை பற்றி தெரிந்துகொள்ளலாமே
Comments
Post a Comment